Monday 30 May 2016

பணிநிறைவு வாழ்த்து

திருசெந்தூர் உபகோட்ட அஞ்சல் துறை உதவி கண்காணிப்பாளர் 
திரு மா.நியூட்டன் பாலகிருஷ்ணன் அவர்கள் 31.05.2016 அன்று பணி நிறைவு பெறுகிறார். அவர்தம் ஓய்வு காலம் சிறப்புற எல்லாம் வல்ல இறைவன்  திருசீரலைவாய் செந்தில்நாதன் இறையடி பணிகிறோம்.

திரு.மா.நியூட்டன் பாலகிருஷ்ணன் அவர்கள் நீலகிரி கோட்டத்தில் PA பணியில் தேசிய தோழனாய்  சேர்ந்து ஆய்வாளர், பயிற்றுனர்,உதவி கண்காணிப்பாளர், உதவி இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளராக பரிணமித்தவர். அத்துடன் அகில இந்திய ஆய்வாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் சங்க தமிழ் மாநில செயலராக & தலைவராக பணியாற்றியவர். அனைத்து ஊழியர்களுக்கும் தமது பணிகாலங்களில் பல்வேறு உதவிகளை செய்தவர். அன்புக்கு எப்போதும் அனுசரனையானவர். நெல்லை கோட்டத்தில் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றிய போது தேசிய சங்கத்துக்கு பல்வேறு உதவிகளை செய்தவர். அவர்தம் ஓய்வு காலம் சிறப்புற வாழ்த்துகிறோம். 

திரு.மா.நியூட்டன் பாலகிருஷ்ணன் அவர்கள் பணிநிறைவு விழா 
நாள்   : 01.06.2016              நேரம் : மாலை 0500 மணி
இடம் : குறிஞ்சி கல்யாண மண்டபம் , திருசெந்தூர் 

தலைமை : திரு.சிவ.ஏ.வி.பி.மோகன சுந்தரம், 
மாநிலத்தலைவர், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை , 
மக்கள் நீதிமன்ற உறுப்பினர் , திருசெந்தூர். 


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms